மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு தொற்று


மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 3 Sep 2021 8:29 PM GMT (Updated: 3 Sep 2021 8:29 PM GMT)

மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு தொற்று

சேலம், செப்.4-
சேலம் மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 102 பேர் குணமடைந்தனர்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் நேற்று சற்று குறைந்தது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 61 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12 பேர், சேலம் ஒன்றியத்தில் 29 பேர், ஆத்தூர் பகுதிகளில் 13 பேர், நகராட்சி பகுதிகளில் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 96 ஆயிரத்து 308 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெண் பலி
ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 102 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 707 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,634 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story