பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஒருவரை தாக்கியவர் மீது வழக்கு


பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஒருவரை தாக்கியவர் மீது வழக்கு
x

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஒருவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 58). இவருக்கும், சிலால் கிராமத்தில் வசிக்கும் ராஜகோபாலின் மகன் ராஜசேகருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில் ராஜசேகர், ராஜதுரையை தகாத வார்த்தைகளால் திட்டி அருகில் கிடந்த உருட்டுக்கட்டையால் தாக்கியதாகவும், இதில் ராஜதுரையின் பல் உடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தடுத்தபோது ராஜதுரைக்கு, ராஜசேகர் கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜதுரை, தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story