சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு


சனி பிரதோஷத்தையொட்டி  சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 4 Sep 2021 9:38 PM GMT (Updated: 4 Sep 2021 9:38 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
சனி பிரதோஷம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. 
தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூன சாமி கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி மற்றும் சாமிக்கு பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.
தீர்த்தமலை
இதேபோல் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவில், நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவானேஸ்வரர் கோவில், ஹரிஹர நாத சாமி கோவில், சவுளுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சிவன் கோவில், மதிகோன்பாளையம் சிவன் கோவில், ஆத்துமேட்டில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
மேலும் மாவட்டத்தில் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலையிலுள்ள அருணேஸ்வரர் கோவில், தென்கரைக்கோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
---

Next Story