மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்


மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 5 Sep 2021 12:20 PM GMT (Updated: 5 Sep 2021 12:20 PM GMT)

வேலூரில் மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

வேலூரில் மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. 

வேலூர் ரங்காபுரம் பாலாற்றங்கரையோரம் சத்துவாச்சாரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை போலீசார் நிறுத்தினர். போலீசாரை கண்டதும் டிரைவர் உடனடியாக சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு இறங்கி ஓடி விட்டார். 

அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை சோதனையிட்டனர். அதில், மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். 

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். 

அதில் தப்பியோடியவர் ரங்காபுரத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் கோகுல் என்று தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story