நகை மாயம்


நகை மாயம்
x
தினத்தந்தி 5 Sep 2021 5:02 PM GMT (Updated: 5 Sep 2021 5:02 PM GMT)

பூட்டிய வீட்டில் 12 பவுன் நகை மாயமானது.

விருதுநகர், 
விருதுநகர் இளங்கோவன் தெருவை சேர்ந்தவர் விஜயராணி (வயது 57). ஓட்டல் நடத்தி வரும் இவர் வீட்டை பூட்டி விட்டு காஞ்சீபுரம் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 12 பவுன் நகை மாயமாகியிருந்தது. இதுபற்றி விஜயராணி விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story