தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதல் 4 டிரைவர்கள் காயம் போக்குவரத்து பாதிப்பு


தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதல் 4 டிரைவர்கள் காயம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 6 Sep 2021 9:28 PM GMT (Updated: 6 Sep 2021 9:28 PM GMT)

தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர்கள் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர்கள் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லாரிகள் மோதல்
ஆந்திரா மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலம் பாலக்காட்டிற்கு மீன் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்தது. இந்த லாரியை ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த டிரைவர் சாயி (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த மாற்று டிரைவர் மோகன் (39) உடன் வந்்தார். 
தொப்பூர் கணவாய் இரட்டைப்பாலம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி முன்னால் சென்ற லாரி மீது மோதி மோதியது. இதில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் சாயி, மாற்று டிரைவர் மோகன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சோ்ந்த பேட்டப்பா (25), பிரகாஷ் (25) ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். 
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து 4 டிரைவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story