மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ்காரர், தடுப்பில் மோதி விழுந்து பலி


மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ்காரர், தடுப்பில் மோதி விழுந்து பலி
x
தினத்தந்தி 7 Sep 2021 7:27 PM GMT (Updated: 7 Sep 2021 7:27 PM GMT)

மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ்காரர், தடுப்பில் மோதி விழுந்து பலி

மதுரை
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் ராஜசேகரன்(வயது 42). இவர் மதுரை டவுன் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். 
நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்றார். ரிங்ரோடு மண்டேலா நகர் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள போலீசாரின் சோதனை சாவடி தடுப்பு கம்பியின் மோதி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்து மயங்கி கிடந்த அவரை அந்த பகுதி மக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜசேகரன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து டவுன் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story