பள்ளி மாணவி மாயம்


பள்ளி மாணவி மாயம்
x
தினத்தந்தி 7 Sep 2021 9:07 PM GMT (Updated: 7 Sep 2021 9:07 PM GMT)

பள்ளி மாணவி மாயமானார்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மருக்காலகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் புவனேஸ்வரி(வயது 14). இவர் கல்லாத்தூர்-தண்டலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை கல்லாத்தூரில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுக்க சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை கடைவீதி, பஸ் நிறுத்தம் மற்றும் உறவினர்கள், தோழிகள் வீடுகள் என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது சகோதரர் புகழேந்தி அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான புவனேஸ்வரியை தேடி விசாரித்து வருகின்றனர்.

Next Story