புதிதாக 20 பேருக்கு கொரோனா


புதிதாக 20 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 Sep 2021 9:08 PM GMT (Updated: 7 Sep 2021 9:08 PM GMT)

புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 9 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 11 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 11 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்றும் யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 80 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 156 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story