கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு


கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Sep 2021 9:10 PM GMT (Updated: 7 Sep 2021 9:10 PM GMT)

கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தண்டலை கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 53). இவர் தனது சைக்கிளில் அவருடைய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை, இடம் தொடர்பான முன்விரோதத்தில் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து ரவிச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் ராஜபாண்டி மீது ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Next Story