காரிமங்கலம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


காரிமங்கலம் அருகே  விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 7 Sep 2021 9:34 PM GMT (Updated: 7 Sep 2021 9:34 PM GMT)

காரிமங்கலம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே உள்ள பச்சைகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் காவேரி. இவருடைய மகன் கார்த்திக் (வயது 22). இவர் காரிமங்கலம் அருகே உள்ள தனியார் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி உள்ளார். கடந்த 27-ந்தேதி கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திக் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story