81 பேருக்கு கொரோனா


81 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 Sep 2021 1:55 PM GMT (Updated: 8 Sep 2021 1:55 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார். 
81 பேருக்கு கொரோனா 
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று முழுமையாக குறையவில்லை. நாளுக்கு நாள் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
அதன்படி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
ஒருவர் பலி 
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 982ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 51 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 239ஆக உள்ளது. 
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 808 பேர் மாவட்டம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று பலியானார். இதனால் பலி எண்ணிக்கை மாவட்டத்தில் 935ஆக உள்ளது. 
---------


Next Story