விஷம் தின்று கல்லூரி மாணவி தற்கொலை


விஷம் தின்று கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 8 Sep 2021 6:38 PM GMT (Updated: 8 Sep 2021 6:38 PM GMT)

விஷம் தின்று கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே புறாக்கர பண்ணை பகுதியை சேர்ந்த முருகேசனின் மகள் சூர்யா (18). இவர், தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் சூர்யா தற்கொலை செய்தவற்காக சம்பவத்தன்று எலி பேஸ்ட்டை (விஷம்) தின்றார். இதில் அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சூர்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சூர்யா வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்தது தெரியவந்தது.

Next Story