ஓட்டப்பிடாரம் அருகே அரசு பள்ளியில் கனிமொழி எம்.பி ஆய்வு


ஓட்டப்பிடாரம் அருகே அரசு பள்ளியில் கனிமொழி எம்.பி ஆய்வு
x
தினத்தந்தி 9 Sep 2021 1:08 PM GMT (Updated: 9 Sep 2021 1:08 PM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே அரசு பள்ளியில் கனிமொழி எம்.பி ஆய்வு செய்தார்

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக எழுத்தறிவு தின நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அப்போது பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கியதோடு மாணவ- மாணவிகளுக்கு கிருமிநாசினி, முகக்கவசங்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story