நீலகிரியில் மேலும் 32 பேருக்கு கொரோனா


நீலகிரியில் மேலும் 32 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Sep 2021 4:49 PM GMT (Updated: 9 Sep 2021 4:50 PM GMT)

நீலகிரியில் மேலும் 32 பேருக்கு கொரோனா.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 32 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்து 18 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 29 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 31 ஆயிரத்து 520 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

 தற்போது 303 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமுள்ள 576 ஆக்சிஜன் படுக்கைகளில் 92 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 484 படுக்கைகள் காலியாக இருக்கிறது.



Next Story