மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை. கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்.


மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை. கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்.
x
தினத்தந்தி 9 Sep 2021 5:49 PM GMT (Updated: 9 Sep 2021 5:49 PM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ -மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பயிலும் மாணவ- மாணவியருக்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

முதுகலை, தொழிற் படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பிப்பதற்கு 30-ந் தேதிக்குள்ளும், புதிதாக உதவித்தொகை பெறுவதற்கு  5.11.21-ந் தேதிக்குள்ளும் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். www.tn.gov.in/bcmbcdept என்ற இணையதளத்திலும் விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை பெறலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Next Story