4-வது நாளாக ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகள் போராட்டம்


4-வது நாளாக ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2021 8:14 PM GMT (Updated: 9 Sep 2021 8:14 PM GMT)

4-வது நாளாக ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாரை சேர்ந்த ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் முதலாம், இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளுக்கான தொடக்க கல்வி பட்டய தேர்வு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடக்க கல்வி பட்டய தேர்வினை ஆன்லைன் வழியாக நடத்தவும், தேர்வுக்கான மதிப்பெண் வழங்குவதில் உள்ள குளறுபடியை சரி செய்யவும் தமிழக அரசை வலியுறுத்தி கடந்த 6-ந்தேதி முதல் தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகளில் சிலர் தேர்வை புறக்கணித்து, தேர்வு மையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 4-வது நாளான நேற்றும் தேர்வு எழுத வந்திருந்த முதலாம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளில் சிலர் தேர்வை புறக்கணித்து, தேர்வு மையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான தமிழ் கற்பித்தல் தேர்வு நடந்தது. தேர்வு எழுத தகுதி பெற்றிருந்த 4 மாணவர்கள் உள்பட மொத்தம் 81 பேரில், 3 ஆண்கள் உள்பட மொத்தம் 43 பேர் தேர்வு எழுதினர். மீதமுள்ள 38 பேரில் பலர் தேர்வு எழுத மையத்திற்கு வரவில்லை. தேர்வை புறக்கணித்து மையம் முன்பு ஒருசிலரே போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story