சூதாடிய 4 பேர் கைது


சூதாடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 9 Sep 2021 8:42 PM GMT (Updated: 9 Sep 2021 8:42 PM GMT)

சூதாடிய 4 பேர் கைது

நெல்லை :
நெல்லை அருகே உள்ள தாழையூத்து பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தாழையூத்தை சேர்ந்த கண்ணன் (வயது 48), அழகு பாண்டி (55), கணேசன் (36), பத்தமடையை சேர்ந்த வெங்கடேஷ் (40) ஆகியோர் என்பதும், 4 பேரும் அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததும் தெரிய வந்தது. உடனே கண்ணன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

Next Story