விளாத்திகுளம் பகுதியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது


விளாத்திகுளம் பகுதியில்  குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Sep 2021 1:13 PM GMT (Updated: 10 Sep 2021 1:13 PM GMT)

விளாத்திகுளம் பகுதியில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி:
சூரங்குடி போலீசார் கடந்த 28-ந்தேதி வேம்பார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வேம்பார் பகுதியில் டிராக்டரில் ஆற்று மணல் கடத்தியதாக வேம்பார் சிந்தாமணி நகரைச் சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் முத்தழகு (வயது 57) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் கடந்த மாதம் 10-ந்தேதி விளாத்திகுளம் மீரான் பாளையம் பகுதியில் உள்ள கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை திருடியதாக கோவில்பட்டி தட்சிணாமூர்த்தி தெருவை சேர்ந்த கண்ணன் (43) என்பவரை விளாத்திகுளம் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரைத்ததன் பேரில் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் முத்தழகு, கண்ணன் ஆகிய 2 பேரையும் விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் கலா குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

Next Story