நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு


நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 10 Sep 2021 8:38 PM GMT (Updated: 10 Sep 2021 8:38 PM GMT)

மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 551ஆக அதிகரித்துள்ளது. நேற்று 10 பேர் உள்பட மாவட்டத்தில் இதுவரை 48 ஆயிரத்து 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 110 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 431 பேர் இறந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 159 ஆக அதிகரித்தது. நேற்று 11 பேர் உள்பட மாவட்டத்தில் இதுவரை 26 ஆயிரத்து 589 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 86 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 484 பேர் இறந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்்தில் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Next Story