தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி சாவு


தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 11 Sep 2021 10:09 AM GMT (Updated: 11 Sep 2021 10:09 AM GMT)

திருவள்ளூர் அருகே தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அப்துல் பஷீர் (வயது 40). கூலித்தொழிலாளி. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அப்துல் பஷீர் பேரம்பாக்கம் பகுதியில் உள்ள வயலில் இருந்த தொட்டியில் இறங்கி உள்ளார். 

அப்போது அவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டதாக தெரிகிறது. தொட்டியில் விழுந்த அவர் சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்து போனார். இது சம்பந்தமாக மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. 

சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து போன அப்துல் பஷீர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story