செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 108 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 108 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 11 Sep 2021 11:00 AM GMT (Updated: 11 Sep 2021 11:00 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 108 பேர் பாதிக்கப்பட்டனர்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 108 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 354 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 804 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 2,440 பேர் உயிரிழந்துள்ளனர். 1,110 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆயிரத்து 158-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 71 ஆயிரத்து 532 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 1,231 பேர் உயிரிழந்துள்ளனர். 395 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story