இளம்பெண்ணை ஏமாற்றிய அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்


இளம்பெண்ணை ஏமாற்றிய அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 11 Sep 2021 5:08 PM GMT (Updated: 11 Sep 2021 5:08 PM GMT)

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரகுபால்வின் ஜெயக்குமார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 
இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ரகுபால்வின் ஜெயக்குமார் ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த இளம்பெண், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ரகுபால்வின்ஜெயக்குமாரை கைது செய்தனர்.
இந்நிலையில் ரகுபால்வின்ஜெயக்குமார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்பொருட்டு அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.

Next Story