குளத்தில் மண் அள்ளியவர் கைது
தினத்தந்தி 11 Sep 2021 9:59 PM GMT (Updated: 11 Sep 2021 9:59 PM GMT)
Text Sizeகுளத்தில் மண் அள்ளியவர் கைது
வடக்கன்குளம்:
வடக்கன்குளம் பழவூர் அருகே உள்ள தெற்கு கருங்குளம் பூந்தொட்டி குளத்தில் சிலர் மண் அள்ளுவதாக பழவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். அப்போது, அங்கு இருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். இதில் மாவடியைச் சேர்ந்த முத்துராஜ் (வயது 47) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகிறார்கள். மேலும் லாரி, பொக்லைன் எந்திரம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire