மறைமலைநகரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


மறைமலைநகரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 Sep 2021 12:59 PM GMT (Updated: 12 Sep 2021 12:59 PM GMT)

மறைமலைநகரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காந்தி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 23), இவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story