திருவள்ளூர் அருகே பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு


திருவள்ளூர் அருகே பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 12 Sep 2021 2:13 PM GMT (Updated: 12 Sep 2021 2:13 PM GMT)

திருவள்ளூர் அருகே பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு.

திருவள்ளூர்,

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சிவசங்கரி (வயது 35). இவர் நேற்று முன்தினம் சிவசங்கரி திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரத்தில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அவர் மப்பேடு அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென சிவசங்கரி கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டனர்.

இதனால் பதறிப்போன அவர், கூச்சலிட்டும் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் அவர்களை விரட்டிச்சென்று பிடிக்க முடியவில்லை. இச்சம்பவம் குறித்து சிவசங்கரி மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story