7-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கராத்தே மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது


7-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கராத்தே மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 12 Sep 2021 5:35 PM GMT (Updated: 12 Sep 2021 5:35 PM GMT)

7-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கராத்தே மாஸ்டர்

குடியாத்தம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தி பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ்அகமது (வயது 30). கராத்தே மாஸ்டர். இவரிடம் 11 வயதான 7-ம் வகுப்பு மாணவி கடந்த ஒரு வருடமாக கராத்தே பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின் பேரில், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் கராத்தை மேஸ்டர் பயாஸ் அகமது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கராத்தே பயிற்சியாளர் பயாஸ் அகமதுவை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். 

Next Story