புதிதாக தேர்வான 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உதவி போலீஸ் சூப்பிரண்டுகளாக நியமனம்


புதிதாக தேர்வான 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உதவி போலீஸ் சூப்பிரண்டுகளாக நியமனம்
x
தினத்தந்தி 13 Sep 2021 10:12 AM GMT (Updated: 13 Sep 2021 10:12 AM GMT)

புதிதாக தேர்வான 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உதவி போலீஸ் சூப்பிரண்டுகளாக நியமனம் தமிழக அரசு உத்தரவு.

சென்னை,

புதிதாக தேர்வாகி பயிற்சி முடித்த 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உதவி போலீஸ் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. அவர்களது பெயர் விவரமும் மற்றும் அவர்கள் உதவி சூப்பிரண்டுகளாக பணி நியமனம் பெற்ற இடம் விவரமும் வருமாறு:-

1. சந்தீஷ்-தூத்துக்குடி ரூரல் உட்கோட்டம். 2. ராஜத் ஆர் சதுர்வேதி-நாங்குநேரி உட்கோட்டம். 3. அங்கிட் ஜெயின்-விருத்தாசலம் உட்கோட்டம். 4. வி.வி.சாய் பிரநீத்-திருத்தணி உட்கோட்டம். 5. அபிஷேக் குப்தா-திண்டிவனம் உட்கோட்டம். 6. அருண்கபிலன்-திண்டுக்கல் ரூரல் உட்கோட்டம். 7. கவுதம் கோயல்-பெருந்துரை உட்கோட்டம். 8. ஸ்ரேயா குப்தா-உத்தமபாளையம் உட்கோட்டம். 9. அரவிந்த்-ஓசூர் உட்கோட்டம்.

Next Story