84 பேருக்கு கொரோனா


84 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 Sep 2021 3:45 PM GMT (Updated: 13 Sep 2021 3:45 PM GMT)

84 பேருக்கு கொரோனா

திருப்பூர்
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று குறைய தொடங்கியது. ஆனால் தற்போது ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 84 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 462-ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 76 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 568-ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 955 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 939-ஆக உள்ளது. 

Next Story