இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.


இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
x
தினத்தந்தி 13 Sep 2021 4:04 PM GMT (Updated: 13 Sep 2021 4:04 PM GMT)

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

தாராபுரம், 
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
வீட்டுமனை பட்டா
தாராபுரம் அருகே குளத்துப்பாளையம் பேரூராட்சி. டி.காளிபாளையம் மற்றும் அம்பேத்கார் நகர் பகுதி பொது மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நேற்று தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர். 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 கொளத்துப்பாளையம் பேரூராட்சி டி.காளிபாளையம் மற்றும் அம்பேத்கார் நகர் பகுதியில்  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.
அது மட்டுமல்ல ஒரு வீட்டில் 3 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதனால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.  
ஆய்வு
 எனவே தாசில்தார் எங்கள் பகுதியை ஆய்வு செய்து வீட்டுமனை நிலம் இல்லாதவர்களுக்கு புதிதாக வேறு இடத்தில் பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story