உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


உளுந்தூர்பேட்டை அருகே  விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 13 Sep 2021 5:29 PM GMT (Updated: 13 Sep 2021 5:29 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை கடன் தொல்லையால் விபரீதம்

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருப்பெயர் தக்கா கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம்(வயது 34). தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 மகன் மற்றும் மகள்கள் உள்ளனர்.

ரத்தினம் வீடு கட்டுவதற்காக பல இடங்களில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையே நேற்று காலை வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ரத்தினத்தை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து எடைக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story