பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 Sep 2021 11:13 AM GMT (Updated: 14 Sep 2021 11:13 AM GMT)

பிளஸ்-1 படித்து வந்த மாணவி, தனது வீ்ட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திரு.வி.க.நகர்,

சென்னை திரு.வி.க. நகர், கென்னடி சதுக்கம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் அசோகன். இவருடைய மகள் காவியா (வயது 17). இவர், பெரம்பூரில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை காவியாவுக்கும், அவருடைய தம்பிக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரையும் சமாதானம் செய்து வைத்த அவர்களது பெற்றோர், பின்னர் வெளியே சென்றுவிட்டனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதில் மனம் உடைந்த காவியா, வீட்டில் உள்ள அறைக்குள் சென்று தூக்குப்போட்டு கொண்டார். தனது அக்கா, தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தம்பி, தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக வந்த பெற்றோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவியாவை மீட்டு பெரியார் நகர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், காவியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி திரு.வி.க நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story