வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி; 4 பேர் மீது வழக்கு


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி; 4 பேர் மீது வழக்கு
x

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தூத்துக்குடி:
இங்கிலாந்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 ½லட்சம் மோசடி செய்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

டிரைவர்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கீழத்தெருவை சேர்ந்தவர் ஜீவா (வயது 35). டிரைவர். இவர் முகநூலில் சரோன் மோர்கன் என்பவருடன் நண்பராக பழகி வந்தாராம். மோர்கன் இங்கிலாந்தில் வசித்து வருவதாக தெரிவித்து உள்ளார். மேலும் ஜீவா வேலை இல்லாமல் இருப்பதாக தெரிவித்து உள்ளார். இதனால் மோர்கன், இங்கிலாந்தில் வேலைவாங்கி தருவதாக ஆறுதல் வார்த்தைகள் கூறினாராம்.

மோசடி

பின்னர் விசா பெறுவதற்காக ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்து 100 தேவைப்படுகிறது என்றும், இந்த பணத்தை தனது நண்பர்களான சாஷித் அலி, ஆரிப்கான், அமித்குமார், ராஜாபாபு ஆகியோரது வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறி உள்ளார். இதனை நம்பிய ஜீவா பணத்தை 4 பேரின் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. மீண்டும் மோர்கனை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜீவா தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story