பொய்கை வாரச்சந்தையில் ரூ.12 கோடிக்கு வர்த்தகம்


பொய்கை வாரச்சந்தையில் ரூ.12 கோடிக்கு வர்த்தகம்
x
தினத்தந்தி 14 Sep 2021 6:30 PM GMT (Updated: 14 Sep 2021 6:30 PM GMT)

பொய்கை வாரச்சந்தையில் ரூ.12 கோடிக்கு வர்த்தகம்

அணைக்கட்டு

வேலூர் மாவட்டம் பொய்கை சத்தியமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. இங்கு வெளிமாநிலங்களில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் உயர்ரக கறவை மாடுகள், ஆடுகள் உள்ளிட்டவைகள் விற்பனைக்காக வருகின்றன.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் வாரச்சந்தை நடைபெற்றது. இதில் அதிகளவில் கறவை மாடுகளும், மற்ற கால்நடைகளும் விற்பனைக்காக வந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையானது. ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் சார்பில் ஆங்காங்கே தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்பட்டு இருந்தன. அதனையும் மீறி பொதுமக்கள் கட்டுக்கடங்காமல் கூடினர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், அண்டை மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் விதவிதமான கறவை மாடுகளும் எருதுகளும் சந்தைக்கு வந்தன. வியாபாரிகள் ஒரு கறவை மாடு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. எருதுகள் ஒரு ஜோடி ஒரு லட்சத்திற்கு மேல் விற்பனையானது. இதனால் இந்த வாரம் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்திருக்கும் என்றனர்.

Next Story