தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Sep 2021 7:01 PM GMT (Updated: 14 Sep 2021 7:01 PM GMT)

பாளையங்கோட்டையில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் தபால்காரர்கள் மற்றும் பன்முகத்திறன் ஊழியர்கள் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோட்ட தலைவர் சீனிவாச சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஜேக்கப்ராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

தபால்காரர் மற்றும் கிராமப்புற ஊழியர்களை வணிகம் என்ற பேரில் இலக்குகளை நிர்ணயித்து அடைய வேண்டுமென ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுப்பதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் பாட்ஷா, அருண்குமார், அருணாசலம், உதயா, கங்காதரன், மோகன், சுந்தர், குருசாமி, கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story