விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட மாணவர்கள்


விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட மாணவர்கள்
x
தினத்தந்தி 14 Sep 2021 7:34 PM GMT (Updated: 14 Sep 2021 7:34 PM GMT)

விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட மாணவர்கள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டம் கல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த மாணவர்கள் ஸ்ரீகாந்த், அருண் ஆகிய இருவரும் பிளாஸ்டிக் மறுசுழற்சியின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக  மும்பை வரை 2,000 கிலோ மீட்டர் தொலைவு சைக்கிள்பயணம் மேற்கொண்டனர். இதன் மூலம் இவர்கள் சர்வதேச சாதனை பதிவு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 5,000 மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் கலெக்டர் மேகநாத ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கலெக்டர் மேகநாத ரெட்டி தொடர்ந்து மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

Next Story