தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 14 Sep 2021 7:50 PM GMT (Updated: 14 Sep 2021 7:50 PM GMT)

சிவகாசியில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

சிவகாசி, 
சிவகாசி பாரதிநகரை சேர்ந்தவர் ஞானதுரை (வயது 43). இவருக்கு முனீஸ்வரி (36) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் ஞானதுரை சிவகாசியில் உள்ள ஒரு லேமினேஷன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். முனீஸ்வரி ரேஷன் கடையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஞானதுரைக்கு குடல்வால்வில் பிரச்சினை ஏற்பட்டது. இதற் காக சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். நோய் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஞானதுரை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முனீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story