கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி


கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
x
தினத்தந்தி 14 Sep 2021 8:55 PM GMT (Updated: 14 Sep 2021 8:55 PM GMT)

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானா்

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் ஒரேநாளில் 20 பேர் குணமடைந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 801 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 396 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story