வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 15 Sep 2021 3:50 PM GMT (Updated: 15 Sep 2021 3:50 PM GMT)

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வெள்ளகோவில்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள உரியம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பாலமுருகன்(வயது 18). இவர் வெள்ளகோவில் அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் தங்கி வேலை செய்து வந்து கொண்டிருந்தார். இவருக்கு வயிற்று வலி தொந்தரவு இருந்ததாகக் கூறப்படுகிறது.நேற்று முன்தினம்  இரவு வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு தனது அறைக்கு சென்று விட்டார்.நேற்று காலையில் மற்ற தொழிலாளர்கள் எழுந்து பார்க்கும்போது தங்கியிருந்த அறைக்கு முன்னால் இருந்த வேப்ப மரத்தில் பாலமுருகன் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே சக தொழிலாளர்கள் மில் மேலாளருக்கு தகவல் தெரிவித்துவிட்டு பாலமுருகனை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு சென்று பார்த்தபோது பாலமுருகன் இறந்து விட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story