தூத்துக்குடியில் மேலும் 10 பேருக்கு கொரோனா


தூத்துக்குடியில் மேலும் 10 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 Sep 2021 4:19 PM GMT (Updated: 15 Sep 2021 4:19 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று 17பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48ஆயிரத்து 609ஆக அதிகரித்துள்ளது. நேற்று 10பேர் உள்பட இதுவரை 48 ஆயிரத்து 64பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 115 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தென்காசி மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 204 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 5 பேர் உள்பட இதுவரை 26ஆயிரத்து 637பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 83பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 பேருக்கு தொற்று உறுதி ெசய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 17 பேர் உள்பட இதுவரை 55 ஆயிரத்து 134 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story