வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 15 Sep 2021 7:31 PM GMT (Updated: 15 Sep 2021 7:31 PM GMT)

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

வள்ளியூர்:
வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

வாலிபர்

ஏர்வாடி அருகே உள்ள வடுகச்சிமதில் மேலத்தெருவை சேர்ந்த கணேசன் மகன் தளவாய்பாண்டி (வயது 22). இவர் வள்ளியூர் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலையில் பங்க்கில் இருந்து வள்ளியூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
நம்பியான்விளை அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே தளவாய்பாண்டி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தளவாய்பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் நாகர்கோவிலை சேர்ந்த சுரர் என்பவரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.

முதியவர்

பாளையங்கோட்டை காரிய நாயனார் தெருவை சேர்ந்தவர் பரமசிவன் (70). ரியல் எஸ்டேட் புரோக்கராக இருந்து வந்தார். இவர் நேற்று தனது சைக்கிளில் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் - மதுரை சாலையில் உள்ள சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பரமசிவன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதனால் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பரமசிவன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story