கல்லூரி மாணவர்களுக்கு பரிசு


கல்லூரி மாணவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 15 Sep 2021 7:43 PM GMT (Updated: 15 Sep 2021 7:43 PM GMT)

கல்லூரி மாணவர்களுக்கு பரிசு

விருதுநகர்
பாரதியார் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் பாட்டுக்கொரு புலவன் பாரதி என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து கல்லூரிக்கு 3 பேர் வீதம் இப்போட்டியில் கலந்து கொண்டனர். அதில் முதல் பரிசாக அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியை சேர்ந்த கவுசிக்குக்கும், இரண்டாவது பரிசை ராஜபாளையம் ஏ.கே.டி. தர்மராஜா கல்லூரியை சேர்ந்த முத்துகவிதாவுக்கும், 3-ம் பரிசாக அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியைச் சேர்ந்த கீதாவுக்கும், அதே கல்லூரியை சேர்ந்த கங்காகாயத்ரி மற்றும் கிருஷ்ணசாமி கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோருக்கு ஆறுதல் பரிசும் கிடைத்தது. பரிசுகளை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் மணிவண்ணன் வழங்கினார். 
தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சுசிலா தலைமை தாங்கினார். டாக்டர் வினோத் சிறப்புரையாற்றினார் அருங்காட்சியக காப்பாளர் கிருஷ்ணம்மாள் வரவேற்றுப் பேசினார் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Next Story