அறந்தாங்கி அருகே மூதாட்டி திராவகம் குடித்து தற்கொலை


அறந்தாங்கி அருகே மூதாட்டி திராவகம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 16 Sep 2021 6:23 PM GMT (Updated: 16 Sep 2021 6:23 PM GMT)

அறந்தாங்கி அருகே மூதாட்டி திராவகம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

அறந்தாங்கி:
மூதாட்டி தற்கொலை
அறந்தாங்கி அருகே கொடிவயல் மேற்கு பகுதியை சேர்ந்தவர் வசந்தா (வயது 65). இவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது. இந்நிலையில் சம்பத்தன்று தீராத வயிற்று வலி காரணமாக வீட்டில் கழிவறைக்கு கழுவுவதற்காக வைத்து இருந்த திரவாகத்தை குடித்துள்ளார். இதையடுத்து அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story