வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது


வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
x
தினத்தந்தி 16 Sep 2021 7:20 PM GMT (Updated: 16 Sep 2021 7:20 PM GMT)

சிவகங்கையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை,

சிவகங்கையில், தொண்டி ரோட்டில் உள்ள ஏஞ்சல் சர்ச் தெருவில் அருகே வசிப்பவர் பழனியப்பன்(வயது 45). சம்பவத்தன்று இரவு இவரது வீட்டில் 2 பேர் பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அது வெடிக்காததால் சேதம் எதுவும் இல்லை.
இது குறித்து பழனியப்பன் சிவகங்கை நகர் போலீசில் புகார்கொடுத்தார். இது தொடர்பாக சிவகங்கை நகர் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி விசாரணை நடத்தினார். இது தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த நிர்மல் (22) விக்கி (20) வெங்கடேஷ் (22) அமர் (22) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீசார் நிர்மலை கைது செய்தனர்.


Next Story