ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி


ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி
x
தினத்தந்தி 16 Sep 2021 7:40 PM GMT (Updated: 16 Sep 2021 7:40 PM GMT)

ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் விபத்தில் பலியானார்.

நெல்லை:

பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சங்கரசுப்பு (வயது 84). ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவர் நேற்று கே.டி.சி. நகர் பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய அவர் மீது அந்த வழியாக வந்த லாரியும் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சங்கரசுப்பு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story