2 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் வேட்புமனு


2 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் வேட்புமனு
x
தினத்தந்தி 16 Sep 2021 8:23 PM GMT (Updated: 16 Sep 2021 8:23 PM GMT)

2 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அரியலூர்:

தற்செயல் தேர்தல்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. அதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு 28 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் இறப்பு, ராஜினாமா போன்ற பல்வேறு காரணங்களினால் கடந்த ஜூன் மாதம் வரை காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல்கள் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 9-ந்தேதி நடைபெறவுள்ளது.
இதில் அரியலூர் மாவட்டத்தில் 3 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிகளும், 13 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளும் காலியாக உள்ளன.
2 பேர் வேட்புமனு தாக்கல்
தற்செயல் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று அரியலூர் மாவட்டத்தில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் 2-வது நாளான நேற்று செந்துறை ஒன்றியத்தில் தளவாய் ஊராட்சியில் 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், சிறுகடம்பூர் ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் செயலாளரிடம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Next Story