10-ம் வகுப்பு துணை தேர்வு தொடங்கியது


10-ம் வகுப்பு துணை தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 16 Sep 2021 8:23 PM GMT (Updated: 16 Sep 2021 8:23 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வு தொடங்கியது.

பெரம்பலூர்:
எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பிற்கான துணை தேர்வு தமிழகத்தில் நேற்று தொடங்கியது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வு பெரம்பலூர் கல்வி மாவட்டத்திற்கு பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் கல்வி மாவட்டத்திற்கு பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும் நேற்று நடந்தது. நேற்று நடந்த தமிழ் தேர்வை எழுத பெரம்பலூர் கல்வி மாவட்டத்தில் 77 ஆண்களும், 53 பெண்களும், வேப்பூர் கல்வி மாவட்டத்தில் 7 ஆண்களும், 5 பெண்களும் என மொத்தம் 142 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால் பெரம்பலூர் கல்வி மாவட்டத்தில் 66 ஆண்களும், 49 பெண்களும் என 115 பேர் தமிழ் தேர்வினை எழுத வந்திருந்தனர். 15 பேர் தேர்வு எழுத வரவில்லை. வேப்பூர் கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 12 பேரும் வந்திருந்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய தமிழ் தேர்வு மதியம் 1.15 மணி வரை நடந்தது. 10-ம் வகுப்பு துணை தேர்வு மையங்களை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன், கல்வி மாவட்ட அலுவலர்கள் மாரிமீனாள் (பெரம்பலூர்), குழந்தைராஜன் (வேப்பூர்) ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வருகிற 20-ந்தேதி ஆங்கில தேர்வு நடைபெறவுள்ளது. வருகிற 28-ந்தேதியுடன் 10-ம் வகுப்பு துணை தேர்வு முடிவடைகிறது.

Next Story