பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு


பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 Sep 2021 8:23 PM GMT (Updated: 16 Sep 2021 8:23 PM GMT)

பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கீழநத்தம் காலனி தெருவை சேர்ந்தவர் ராணி(வயது 42). அதே பகுதியை சேர்ந்தவர் ராணியின் உறவினர் பாண்டியன் (25). சம்பவத்தன்று ராணி, பாண்டியனிடம் குடும்ப பிரச்சினை குறித்து கேட்டுள்ளார். அப்போது ராணிக்கும், பாண்டியனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றியதில் ராணியை பாண்டியன் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராணியை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் ராணி அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story