விழுப்புரம் அருகே தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் ரூ.3½ லட்சம் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


விழுப்புரம் அருகே தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் ரூ.3½ லட்சம் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Sep 2021 5:22 PM GMT (Updated: 17 Sep 2021 5:22 PM GMT)

விழுப்புரம் அருகே தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம், 

நகை கொள்ளை

விழுப்புரம் அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). இவர் புதுச்சேரி மாநிலம் கரியமாணிக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் செந்தில்குமார் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு நூறு நாள் வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் வேலை முடிந்து செந்தில்குமார், தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு திடுக்கிட்ட அவர், உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 10 பவுன் நகைகள், 100 கிராம் வெள்ளிப்பொருட்கள் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகை மற்றும் வெள்ளிப்பொருட்களின் மதிப்பு ரூ.3½ லட்சமாகும்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story