போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திடீர் சாவு


போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
x
தினத்தந்தி 18 Sep 2021 7:20 PM GMT (Updated: 18 Sep 2021 7:20 PM GMT)

போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திடீர் சாவு

கே.கே.நகர், செப்.19&
திருச்சி மாவட்டம்  மணப்பாறை போலீஸ் நிலையத்தில் சப்&இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ராபர்ட் ரூஸ்வெல்ட் (வயது 50). இவர் திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story